top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

சிகப்பு ரோஜா - ஒன்று

Updated: Aug 26, 2022



ஏர்போர்ட் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் திவ்யா துணியால் நெய்த சிகப்பு ரோஜா பூ கொண்ட வெள்ளை முகக்கவசம் அணிந்து கொண்டு சிகப்பு கலர் அமெரிக்கன் டூரிஸ்ட்டர் பெட்டியை உருட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள். செக்யூரிட்டி கதவை அவள் கடக்க முயல அங்கு நின்றுருந்த செக்யூரிட்டி வேலன் அவளை பார்த்து பெட்டியை எடுத்து செக்யூரிட்டி கேபினில் வைக்குமாறு கூறுகின்றார். தனது தவறை உணர்ந்து திவ்யா "சாரி" என்று கூறி பெட்டியை உருட்டிக்கொண்டு கேபினை நோக்கி நடந்தாள். கேபின் மீது பெட்டியை தூக்கி வைக்க முடியாமல் திவ்யா கஷ்டப்பட, ஒரு கை அங்கே திவ்யாவிற்கு உதவுகின்றது. ரகுலன் அவளுக்கு பெட்டியை கேபினில் தூக்கிவைத்து உதவுகின்றான். திவ்யாவை முகக்கவசத்தில் இருக்கும் ராகுலனை பார்த்து "தேங்க்ஸ்" என்று கூற பதிலுக்கு முகக்கவசத்துடன் புன்முறுவுகின்றான் ரகுலன். இருவரும் வேறுவேறு செக்யூரிட்டி வரிசைக்கு செல்கின்றனர். ரகுலன் திவ்யாவை பார்த்தவாறே நிற்கின்றான். திவ்யாவும் திரும்பி ரகுலனை பார்த்து புன்முறுவுகின்றாள். முகக்கவசத்துடன் புன்முறுவும் போது அவள் கன்னங்கள் விரிந்து கண்கள் சுருங்குவது ரகுலனுக்கு நன்றாகவே தெரிகின்றது.


கேபினின் மறுமுனையில் திவ்யா பெட்டியை எடுக்க கஷ்டப்பட, ரகுலன் சிரித்தவாறு வந்து பெட்டியை எடுத்து கொடுக்க திவ்யா சிரித்துக்கொண்டே "தேங்க்ஸ் அகேன்" என்று சொல்ல ரகுலன் சிரித்துக்கொண்டே தலையசைத்து கட்டை விரலை உயர்த்தி காட்டி எஸ்கலேட்டர் நோக்கி நடக்கின்றான். திவ்யா ரகுலனை பின்தொடர்ந்து வர ரகுலன் எதுவும் உதவி வேண்டுமோ என்ற எண்ணத்தில் திரும்பி நிற்க, திவ்யா "வாஷேர்மன்பெட்டுக்கு எந்த பிளாட்பார்ம் எடுக்கணும்?" ரகுலன் பிளாட்பார்ம் 1-ஐ பார்த்து கை காட்டுகின்றான். திவ்யா பிளாட்பார்ம் 1-ஐ நோக்கி நடக்கின்றாள். ரகுலன் அவளை பின்தொடர திவ்யா திரும்பி பார்க்கின்றாள். ரகுலன் முதல் முறையாக வாய் திறந்து "நானும் வாஷேர்மன்பெட் தான் போறேன்! வாங்க guide பண்றேன்!" என்று சொல்ல திவ்யா முகத்தில் ஒரு சந்தோசம் தெரிந்தது. ரகுலன் அதை பார்த்து ரசித்தான்.


திவ்யா தான் மும்பையிலிருந்து வந்திருப்பதாகவும் இங்கு IT Accumens கம்பெனியில் புதிதாக மாறி வந்திருப்பதாகவும் கூறுகின்றாள். இதை கேட்டு ரகுலன் எந்த ஒரு ஈடுபாடு இல்லாமல் மௌனமாய் நிற்க, திவ்யா "நீங்க என்ன பண்றீங்க?" ரகுலன் தடுமாறியபடி "ஒரு படம் டைரக்ட் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன்!" திவ்யா "ஓ வாவ்! கூல்! செம்ம! ஐ லவ் மூவிஸ்! ஷார்ட் பிலிம்ஸ் ஏதாவது பண்ணி இருக்கீங்களா? யூ டியூப்ல இருக்கா?" அவளது தொடர் கேள்விகள் ரகுலனை திணறடித்தது, ரகுலன் "இருக்கு பட் அது ஓகே வா தான் இருக்கும் நாட் சம்திங் கிரேட்!" அதற்கு சிரித்துக்கொண்டு திவ்யா "அதை நாங்க சொல்லணும்!" என்று சொல்ல ரகுலன் ஷார்ட் பிலிம்மின் பெயரை சொல்கின்றான். படத்தின் பெயர் கேட்டு அவளது கண்கள் பெரிதாக விரிகின்றது, திவ்யா விரிந்த கண்களுடன் "நான் உங்க படத்தை டெல்லி பிலிம் பெஸ்டிவல்ல பார்த்து இருக்கேன்! யு நோ, உங்களுக்கு ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தாங்க தெரியுமா! டைரக்டர் வரலன்னு வேற படத்துக்கு அவார்ட் கொடுத்துட்டாங்க. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆடிட்டர் ஸ்டேஜ்ல பேசும்போது உங்க படத்தை மென்ஷன் பண்ணி மோஸ்ட் அண்டர் ரேட்டெட் பிலிம்ன்னு சொன்னாங்க, ஆமாம் ஏன் நீங்க வரல?" என்று அவள் படபடவென்று கேட்க, மெட்ரோ ரயில் வேகமாக அவர்கள் நிற்கும் பிளாட்பார்மை நோக்கி வந்து கொண்டிருந்தது.


இருவரும் ரயிலில் ஏறி அமர்கின்றனர். ரகுலன் இருவர் அமரக்கூடிய நீல நிறமுள்ள பிளாஸ்டிக் இருக்கையில் அமருகின்றான். திவ்யா ரகுலன் எதிரே அதே போன்ற இருவர் அமரக்கூடிய இருக்கையில் அமருகின்றாள். ரகுலன் அமைதியாய் திவ்யாவை பார்த்துக்கொண்டு இருக்க திவ்யா புருவத்தை உயர்த்தி கையை விரித்து நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே என்பது போல கேட்டாள். சாய்ந்து உட்கார்ந்திருந்த ரகுலன் முன்னே வந்து "டெல்லி வரை வர அப்போ கைல காசு இல்ல வரல! இது வரைக்கும் அங்க என்ன நடந்ததுன்னு கூட எனக்கு தெரியாது, யாருமே சொல்லலே! சொல்றதுக்கு அங்க யாருமே போகலேயே!! 5 வருஷம் முன்னாடி நடந்த விஷயம்! நீங்க சொல்லித்தான் அங்க இவ்வளவு நடந்ததே எனக்கு தெரியும்! ஸ்டாண்டிங் ஓவேஷன்! அவார்ட்ஸ்! இதெல்லாம் என்ன மாதிரி ஒருத்தனுக்கு கிடைச்சுதுன்னு நினைச்சா!!" என்று ரகுலன் சொல்ல அவன் கண்கள் ஈரமாகியது, "இத நான் யார்கிட்டயாவது சொன்னாலும், யாரும் நம்பமாட்டாங்க! இதுக்கும் சேர்த்து என்னை கலாய்ப்பாங்க!!" என்று சொன்னவுடன் ரகுலன் குரல் உடைந்தது. திவ்யா ஆறுதலாய் ரகுலன் கையை பிடித்து சமாதானம் செய்தாள். ரயில் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. கூட்டம் முட்டி மோதி ஏறியது, கூட்டத்தை பார்த்த திவ்யா எதிர் இருக்கையிலிருந்து ரகுலன் இருக்கையில் அவன் அருகில் வந்து அமருகின்றாள். திவ்யா கண்களில் ரகுலன் மீது ஒரு வித பாசம் தெரிய தொடங்கியது. திவ்யா கேட்க, இருவரும் தொலைபேசி என்னை பரிமாறிக் கொள்கின்றனர். திவ்யா வாட்ஸப்பில் "ஹாய்" என்று உடனே அனுப்ப, ரகுலன் அந்த என்னை போனில் சேவ் செய்து கொள்கின்றான்.


கூட்டம் அதிகமாக நெருக்கம் இவர்களை மேலும் நெறுக்குக்கின்றது. அப்பொழுது ரகுலனின் போன் ஒலிக்கின்றது, அவன் பாக்கெட்டிலிருந்து போனை எடுக்கும் பொழுது அதில் பொண்டாட்டி கால்லிங் என்று இருப்பதை திவ்யா இதேர்ச்சையாக படிக்கின்றாள். ரகுலன் கல்யாணம் ஆனவன் என்பது திவ்யாவிற்கு சற்று ஏமாற்றத்தை தருகின்றது. ரகுலன் போனை எடுத்து "ஹலோ ஹலோ" என்று சொல்ல திவ்யா தனது பெட்டியை எடுத்துக்கொண்டு லேடீஸ் ஒன்லி கம்பார்ட்மென்ட் நோக்கி கூட்டத்தை விலக்கி நடக்கின்றாள். மறுமுனையில் பேச்சுக்குரல் கேட்காததால் போனை துண்டித்து ரகுலன் திவ்யா ஏன் திடிரென்று எழுந்து செல்கின்றாள் என்று பார்த்துக்கொண்டிருக்க ஒரு தாத்தா அவன் அருகில் வந்து உட்காருகின்றார். மறுபடியும் தனது மனைவிக்கு போன் போட முயற்சிக்க ரயில் சுரங்கப்பாதைக்குள் செல்கின்றது. சிக்னல் கட் ஆகின்றது. ரகுலன் போனை பார்க்க அதில் சிக்னல் இல்லை. திவ்யாவை திரும்பவும் அவன் தேட அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் தெரியவில்லை.


அடுத்து ஸ்டாப் சென்ட்ரல் மெட்ரோ என்று ஒலிபெருக்கி ஒலிக்க, ரகுலன் வயிற்றில் சரக்கென்று ஏதோ ஒன்று குத்தியது போல உணருகின்றான். குனிந்து பார்த்தபொழுது ஒரு சிறிய மஞ்சள் நிற பிளாஸ்டிக் ஊசி குத்த பட்டிருப்பதை காண்கின்றான். என்ன என்று அதை எடுத்து பார்ப்பதற்குள் தலை சுற்றி இருக்கையிலிருந்து கீழே சாய பின்னாலிருந்து திவ்யா ஓடி வந்து ரகுலனை தாங்கி பிடிக்கின்றாள். தனது கையில் இருந்த சின்ன விஸ்கி பாட்டிலை திறந்து யாரும் காணாமல் ரகுலன் மீது ஊற்றுகின்றாள், "குடிக்காதீங்கன்னு சொன்ன எங்க கேக்குறீங்க? எப்போ பார்த்தாலும் நான் தான் அசிங்க பட வேண்டியதா இருக்கு!" என்று திவ்யா முணுமுணுக்க அருகில் உட்கார்ந்து இருந்த தாத்தா "இந்த காலத்து பசங்க எப்போ பார்த்தாலும் குடி குடின்னு இருக்கானுவ!! காலம் ரொம்ப கெட்டு போச்சு!" என்று வழக்கம் போல உச்சு கொட்ட! ஒரு தோளில் ரகுலனை தாங்க மறு கையில் பெட்டியை உருட்டி சாதாரணமாக சென்ட்ரல் நிறுத்தத்தில் ரகுலனை சுமந்தபடி வெளியேறுகின்றாள். அவள் பலம் அப்பொழுதுதான் புலப்பட்டது. ரகுலன் தடுமாறி தடுமாறி நடக்க இவள் ரகுலனை இழுத்துக்கொண்டு சென்ட்ரல் வாசலில் ஆட்டோவில் ஏற்றி நேரே லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்லுமாறு கூறுகின்றாள். ஆட்டோ சீறி பாய்கின்றது. போகும் வழியில் ரகுலனின் போனை திறந்து சிம் கார்டை எடுத்து உடைத்து வீசி எரிகின்றாள். ரகுலனின் பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை தேடி அதிலுள்ள ஐடி கார்டை தேடி எடுக்கின்றாள். பான் கார்டு ஆதார் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸை எடுத்து தனது கை பையில் வைத்துக்கொள்கின்றாள். ஆட்டோ டிரைவர் திவ்யா பாண்ட் பாக்கெட்டில் கை விடுவதை பார்த்து ஏதோ சில்மிஷம் செய்கின்றாள் என்று நினைத்து கண்ணாடியில் எட்டி பார்க்க திவ்யா அவரை பார்த்து முறைத்து "நேரா பார்த்து வண்டி ஓட்டுயா!" என்று அவள் கோபமாக சொல்ல, பயந்து ஆட்டோ டிரைவர் நேரே பார்த்து ஆட்டோவை ஓட்டுகின்றார்.


ஆட்டோவில் மயங்கிக்கிடந்திருந்த ரகுலனை பார்த்து திவ்யா மனதில் "எனக்கு உன்ன புடிச்சு போச்சு ரகுலா!! இனி நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்! நீ யாரை வேணா கல்யாணம் பண்ணி இருக்கலாம் ஆனா இனி நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்!" என்று மனதில் நினைத்து விஷமத்தனமாய் ரகுலனை பார்த்து சிரிக்கின்றாள்.


மிருதுளா ரகுலனுக்கு போன் போட்டு கொண்டிருக்க மொபைல் சுவிட்ச் ஆப் என்று வருகின்றது. எரிச்சலில் போனை மேஜை மீது எரிய கான்ஸ்டபிள் சரவணன் அவள் அறையில் நுழைந்து "மேடம் டிஜி சார் உங்கள கூப்பிடறாரு" என்று சொல்ல மிருதுளா "2 மினிட்ஸ்ல வரேன்னு சொல்லுங்க" என்று சொல்லி அவளது போலீஸ் தொப்பியை மேஜையின் மேல் இருந்த எடுத்து மாட்டிக்கொண்டு கதவை திறந்து வெளியே செல்கின்றாள். கதவின் மீதுள்ள பெயர் பலகையில் "மிருதுளா ரகுலன் (ஐபிஸ்) - டேபியூட்டி கமிஷனர் ஆப் போலீஸ்" என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது.


ஆட்டோ லீலா பேலஸ் ஹோட்டல் உள்ளே நுழைய, செக்யூரிட்டி பாலன் ஆட்டோவை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு சோதனை செய்கின்றார். ரகுலன் மயங்கி கிடப்பதை பார்த்து அருகில் வர, சாராய வாடை வீச ரகுலன் குடித்து மயங்கி கிடக்கின்றான் என்று நினைத்து ஆட்டோவை உள்ளே அனுப்புகின்றார்.


திவ்யா ஹோட்டல் வரவேற்பில் தனக்கும் தனது கணவருக்கும் ரூம் வேண்டும் என்று வரவேற்பில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் கேட்கின்றாள். ரகுலன் வரவேற்பில் உள்ள சோபாவில் தலை தொங்க மயங்கியபடி சோபாவில் அமர்த்தப்பட்டிருந்தான். அவனிடமிருந்து வீசும் சாராய வாடை, கடந்து செல்வோரை திரும்பி பார்க்க வைத்தது. திவ்யா வேகமாக ஐடி கார்டு கொடுத்து ரூம் புக்கிங்ஐ துரித படுத்துமாறு வரவேற்பில் உள்ள பெண்ணிடம் கூறினாள்.


ரூம் பாய் சாவியுடன் வந்து பெட்டியை எடுத்துக் கொண்டான். அரை மயக்கத்தில் இருந்த ரகுலனை திவ்யா தோளில் தாங்கி லிப்ட்டிற்கு கொண்டு சென்றாள். ரூமிற்க்கு வந்தவுடன் ரகுலன் படுக்கையில் படுக்க வைக்கப்படுகின்றான். கூட வந்த ரூம் பாய்க்கு 200 ரூபாய் டிப்ஸ் ஆக கொடுக்கின்றாள். மேலும் 2000 ரூபாய் கொடுத்து சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி கட கட வென ஒரு பேப்பரில் எழுதி இதை மெடிக்கலில் வாங்கி வருமாறு ரூம் பாயிடம் கூற, தயங்கி நின்ற ரூம் பாய்க்கு மேலும் 500 ரூபாய் கொடுக்கின்றான். ஒரு சலாம் அடித்து சந்தோஷமாக வாங்கி வருவதாக கூறி ஓடி சென்றான். ரூம் கதவு மெதுவாக சாத்தப்பட்டது.


மிருதுளா டிஜியிடம் பேசி முடித்து வெளியே வரும்பொழுது ரகுலன் போனிற்கு திரும்பவும் அழைக்கிறாள், போன் சுவிட்ச் ஆப் என்று மறுபடியும் வர பதற்றமாகின்றாள். நேரே ஐடீ டீம் அறைக்கு செல்கின்றாள். அங்கு வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் செல்வத்தை அழைத்து விவரத்தை சொல்கின்றாள். செல்வம் ரகுலனின் போனை ட்ராக் செய்து கால்மணிநேரத்தில் தகவல் சொல்வதாக கூறி சர்வர் ரூமிற்கு செல்கின்றான். மிருதுளா, வீட்டிற்கு போன் செய்து ரகுலன் அங்கு வந்தானா என்று வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் விசாரிக்கின்றாள். அவள் ரகுலன் அங்கு வரவில்லை என்று கூற, ரகுலன் அம்மாவிற்கு போன் செய்கின்றாள். அங்கும் வரவில்லை என்று கூற மிருதுளா கவலை அடைகின்றாள். போலீஸ் வேலையில் தன்னை காயப்படுத்த யாரேனும் செய்த வேலையா இருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருக்க, இன்ஸ்பெக்டர் செல்வம் நேரே வந்து "மேடம் ஒரு நிமிஷம் இதை கொஞ்சம் பாருங்க?" என்று கேட்க மிருதுளா செல்வத்தை பின் தொடர்ந்து சர்வர் ரூமிற்க்கு செல்கின்றாள்.


ரூம் பாய் கொண்டுவந்த கவரை திவ்யாவிடம் கொடுக்க, கவரில் எல்லாம் சரியாக உள்ளதா என்று மருந்துகளை தனி தனியே பிரித்து சரி பார்க்கின்றாள். பின்னர் கவரில் தான் வாங்கி வர சொன்ன கயிற்றால் முதலில் ரகுலனை கட்டிலோடு சேர்த்து கட்டுகின்றாள். கட்டிமுடித்தபின் ஒவ்வொரு மருந்தாக எடுத்து மற்ற மருந்துகளோடு கலக்குகின்றாள். ரகுலனுக்கு விழிப்பு வருகின்றது முனகிக்கொண்டு எழ முயற்சி செய்கின்றான். அவனது கை கால்கள் கட்டிலோடு கட்டப்பட்டதால் தடுமாறுகின்றான். முனகிக்கொண்டு திவ்யாவை அவன் பார்க்க அவள் அவன் கண்களுக்கு மங்கலாக தெரிகின்றாள். கொஞ்சம் கொஞ்சமாக தெளிய திவ்யா தெளிவாக தெரிகின்றாள். அவள் கையில் ஊசியுடன் அருகில் வந்து "குட் ஈவினிங் ராகுலன்" என்று சிரித்து கூற ரகுலன் பதற்றமாகி "என்ன பண்றீங்க? எதுக்கு இப்படி கட்டி போட்டு இருக்கீங்க?" என்று கேட்க "ஐ லவ் யு ரகுலன்! நான் உங்கள விரும்புறேன்! அத உங்க கிட்ட சொல்லத்தான் இங்க கூப்பிட்டு வந்திருக்கேன்" அவள் சொல்வதை கேட்டு ரகுலன் சுற்றும் முற்றும் பார்க்க இது ஒரு ஹோட்டல் அறை என்பது புரிந்தது "எனக்கு கல்யாணம் ஆச்சு, நான் ஒரு...வெட்டி பையன்...மேடம்...இது வரைக்கும் பத்து காசு கூட சம்பாதிக்கல! அப்பா அம்மா பொண்டாட்டி காசுல தான் காலத்தை ஓட்டிட்டு இருக்கேன்! என்னை கடத்தி வந்ததுல உங்களுக்கு பத்து காசு பிரயோஜனம் கிடைக்காது! என்னை விட்டுடுங்க! நான் அப்படியே போய்டுவேன்! நான் யார்கிட்டேயும் உங்கள பத்தி சொல்லமாட்டேன் மேடம்" என்று ரகுலன் படபடப்போடு சொல்ல திவ்யா அதை கண்டு சிரிக்கின்றாள், சிரித்துக்கொண்டே "ரகுலன் நான் உங்கள சீரியஸ்ஸா காதலிக்குறேன்! அண்ட் கால் மீ திவ்யா! ஓகே!! ரகுலன் எனக்கு ஒன்னு புடிச்சுப்போச்சுன்னா அது எனக்கு கண்டிப்பா வேணும் ரகுலன்! அப்படி கிடைக்கலேன்னா எனக்கு பயங்கர கோபம் வரும்!! அதுக்கப்பறம் அது யாருக்கும் கிடைக்க கூடாதுன்னு ஒரு வெறி வரும்! இப்போ எனக்கு உங்கள புடிச்சு போச்சு! அப்போ எனக்கு உங்கள வேணும் அவ்வளவுதான் வெரி சிம்பிள் மேட்டர். உங்களுக்கு கல்யாணம் ஆச்சு ஆகலேன்னுன்றதெல்லாம் எனக்கு கவலை இல்லை" என்று சொல்லிக் கொண்டே ஊசியை குத்த ரகுலன் அருகில் வர, ரகுலன் உரக்க "ஹெல்ப் ஹெல்ப், யாராவது காப்பாத்துங்க, ஹெல்ப் ஹெல்ப் ஹெல்ப், காப்பாத்துங்க" என்று கத்துகின்றான். கையை மடக்கி கட்டிக்கொண்டு ரகுலனை பொறுமையாக பார்த்து திவ்யா நின்றாள். "கத்தியாச்சா? இப்போ ஊசி போடலாமா? நீங்க எவ்வளவு கத்தினாலும் யாருக்கும் கேக்காது! நாம இருக்குறது சவுண்ட் புரூப் ரூம்! சோ நோ டிஸ்டருபன்ஸ்! இப்போ நீங்க நல்ல தூங்குங்க ரகுலன்! எனக்கு நிறைய வேலை இருக்கு..." என்று கூறிக்கொண்டே அவள் ஊசியை குத்துகின்றாள். கொஞ்ச நேரத்திலே ரகுலன் பேச்சு குழைந்து நினைவை இழக்கின்றான். திவ்யா ரகுலன் உதட்டில் ஒரு முத்தம் வைத்து அவனது ஆடைகளை கலைகின்றாள். கூடவே தனது ஆடைகளையும் கலைகின்றாள். அவள் குத்திய மருந்தில் ரகுலனின் நினைவுகள் மட்டும் மழுங்கியதே தவிர அவனது உணர்ச்சிகள் மழுங்கவில்லை. திவ்யாவின் நிர்வாண ஸ்பரிசம் பட்டவுடன் அவனது உணர்வுகள் உயிர் கொண்டது, ரகுலனை வருடியபடி "இனிமே நீ எனக்கு மட்டும் தான் நான் உனக்கு மட்டும் தான்! காமம் இல்லா காதல் காதலே இல்லையே! ல ல லா லா ல லா!" என்று பாடிக்கொண்டே திவ்யா ரகுலனை அணைத்து முத்தமிட்டுபடி படுக்க, அவள் பின்னங் கையால் கை தட்ட ரூமின் விளக்குகள் நொடியில் அணைகின்றது. ஜன்னல்கள் தானாகவே ஷட்டர் கொண்டு மூடுகின்றது மொத்த அறையும் பொறுமையாக இருட்டாகின்றது.


மிருதுளா சர்வர் ரூம் டிவியில் ரகுலனின் சிம் டவர் ட்ராப் ஆவதும் பிறகு சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷனில் ட்ராப் ஆவதையும் காண்கின்றாள். அப்பொழுது சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் சிசிடிவி விடியோவை பார்க்க ஒரு சிகப்பு ரோஜா மாஸ்க் அணிந்த பெண் ஒருத்தி ரகுலனை தோள் மீது வைத்து நடந்து செல்வதை காண்கின்றாள். ரகுலன் நினைவில் இல்லை என்பது அவனது நடையில் தெளிவாக தெரிந்தது. திரும்பவும் விடியோவை ரீபிலே செய்ய மிருதுளா சொல்கின்றாள், இம்முறை கொஞ்சம் ஜூம் செய்து காட்ட சொல்கின்றாள். செல்வம் அந்த விடியோவை கொஞ்சம் ஜூம் செய்து மெதுவாக நகரும் படி பிலே செய்கின்றார். இம்முறை விடியோவை பொறுமையாக பார்த்த பொழுது ரோஜா பூ மாஸ்க் அணிந்த அந்த பெண் சிசிடிவியை பார்த்து, ரகுலன் தோள் மீது வைத்து கையால் நடுவிரலை காமெராவிற்கு காட்டி சிரிப்பது தெளிவாக தெரிந்தது. இதைக் கண்டு மிருதுளா நிலைகுலைந்து நாற்காலியில் சாய்கின்றாள். செய்வதறியாது குழம்பி போய் உட்கார்ந்திருக்கின்றாள். கண்ணின் ஓரத்தில் கண்ணீர் கசிந்தது, அதை துடைத்துக் கொண்டு பழைய திமிரோடு மிருதுளா எழுந்து செல்வத்திடம் "சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு இன்போர்ம் பண்ணிடுங்க! அங்க போய் விசாரிச்சு உடனே இன்போர்ம் பண்ண சொல்லுங்க! கார்ல போனாங்களா? ஆட்டோ வா? இல்ல பஸ்ஸா? எதுல போனாங்கன்னு பக்கத்துல இருக்குற சிசிடிவி புட்டேஜை செக் பண்ணி அப்டேட் பண்ண சொல்லுங்க! ரகுலன் போட்டோவை எல்லாருக்கும் அனுப்பிடுங்க! எனக்கு அந்த train உள்ள இருக்குற புட்டேஜ் வேணும், ஒரு மணி நேரத்துல வேணும் செல்வம். மேக் இட் குயிக்!!" என்று பட பட வென சொல்லி மிருதுளா வெளியேற செல்வம் ஆச்சரியமாக பார்க்கின்றார்.


12 ஆவது மாடியின் ஜன்னலின் திரையை விலக்கி நிர்வாணமாய் சூரியனின் அஸ்தமனத்தை பார்த்து சிரித்துக்கொண்டு "மிருதுளா இனி சூர்யா தேவன் எனக்கு மட்டும் தான் சொந்தம்!"



தொடரும்...


இந்த பொய் கதையை எழுதியது,

சிவராஜ் பரமேஸ்வரன்.

0 views0 comments
bottom of page